இருக்கும் போது அருமை அறியல
இழந்த வலி இன்னும் குறையல
பால் குடுத்த, சோறு ஊட்டுன , புத்தி சொன்ன
ஆனா வாழும் போது பாக்காம போய்ட
பெத்த கடன வாங்காம போனியா
இல்ல, புள்ள கடன் பட கூடாதுனு விட்டுட்டு போனியா
என் மகளா நீ பிறந்துட்டனு மனச தேத்துக்கிட்டாலும் ,
மனசெல்லாம் உன் நினைப்பு வந்து வந்து போகுது
அம்மாவின் காலடியில் மட்டுமா சொர்க்கம்
அம்மாவின் கையால் அடிவாங்கியதும் சொர்க்கம்
தாய் மடியில் தலைசாய்த்து தூங்கும் போதும் சொர்க்கம்
அம்மாவிற்கு பெருமை சேர்ப்பதில் சொர்க்கம்
அம்மா ...... சொர்க்கம்.....
Comments
Post a Comment