Skip to main content

நான் இன்னும், இன்றும், உன்னை காதல் செய்கிறேன்.

கடந்து வந்த பாதை பெரிதல்ல,
அதில் நீ கடந்து சென்ற தருனங்கள் தான் அரிது.

நினைக்க முடியாத அளவு காதல்,
அதில் மறக்க முடியாத நினைவு,
உன் பிறிவு.

உன்னுடன் இருந்த நிமிடங்கள்
அவ்வளவு அழகு,
சொல்ல என்னிடம் மொழி இல்லை - உயிரே உன்னை இழந்த நொடி மட்டும்,
இன்னமும் வலிக்கிறது.

இவ்வளவு வலி இருக்கும் என தெரிந்திருந்தால்,
அன்றே

பிரியாமலிருக்க ஏதேனும் வேறொரு
வழியில்
கஷ்டபட்டாவது உன்னை
அழைத்து வந்திருப்பேன்.

என் நினைவுகள் உனக்கு இருக்குமா? இல்லாமல் இருக்குமோ?
என நினைத்து நான் நேரம் கடத்தவில்லை,

என்னால் முடியும் போலுதெல்லாம்
உன் நினைவுகளை அசைபோட்டு, உன்னிடம்

மன்னிப்பும் காதலும்,
சொல்லி சொல்லி
இளைப்பாறி கொள்கிறேன்,


நீ நம்ப வேண்டும் என எழுதவில்லை,

என்னால் மறக்கவும் மறைக்கவும் முடியாமல்    இறுதியாய் எழுதுகிறேன்,

நான் இன்னும்,
இன்றும்,
உன்னை காதல் செய்கிறேன்.


-சுயநலத்துடன்

சையது...

(படிக்க மட்டுமே, பகிர வேண்டாம்)

Comments

Post a Comment

Popular posts from this blog

சிற்பி

நிலவில் ஒளி எடுத்து, அவள் முகம் வரைந்து. இரவிடம் நிழல் எடுத்து, விழிக்கு மையிட்டு. செவ்வானம் பிரதி எடுத்து, மேனிக்கு வண்ணமிட்டு, பாலில் ஆடை எடுத்து, பாவையின் பல் செய்து. தென்னையில் பூவை போல், என் தேவதைக்கும் பூவைத்து சிலை செதுக்கி பார்த்தேனடி, அழகே, சிறிதும் உனக்கது இனையில்லை... உன் அன்னை போல் வேறு நல்ல சிற்பியும் இல்லை. -சையது ஹசேன்...

பின் ஜென்மம்

முன்  ஜென்மத்தில் நான்  செய்த  பாவத்திற்கு கடவுள்  எனக்கு கொடுத்த  நரக தண்டனை தான்   காதல் ... பாவம்... கடவுளுக்கு தெரியாது  அவள் நினைவுகள் தான்  என் சொர்க்கம் என்று ... - சையது