வேலையில்லா பட்டதாரி

விடியற்காலை வரிசையில் நின்றான் 
பால் வாங்க அல்ல 
படிக்க தாள் வாங்கவும் அல்ல 
படித்து வாங்கிய பட்டங்கள் கையுடன் 
பிடித்துகொண்டு  பிள்ளை போல்  நின்றான்.
 
விடிந்த பின்பும் கதிரவன்  வந்தும், 
விடியலை தேடி வேலைக்காக  நின்றான்,
அழைப்பு  வந்தது இவன்ப்பெயர்  கூவி,
 அடியெடுத்து   வைத்தான்  அலுவலரை நோக்கி,      

 கேள்விகள் தொடர்ந்தன,
பதில்களும் பறந்தன,

கேட்ட கேள்விகளுக்கு 
பொருத்தமான பதில்கள்,

கேட்டவர் மனதிற்கு
போதுமான விடைகள்,

 வேலை கிடைத்திடும் 
நம்பிக்கை இவனுக்கு,
வேலை அளித்திடும் 
எண்ணம் அவருக்கு ,

தீர்ப்புக்கான நேரம் வந்தது ,
கனவுகள் நிஜமாகும் 
காலமும்  வந்தது,

அனுமதி கடிதம் அலுவலர் கொடுக்க,
அதை வாங்கிட இவனும் முன்னால் நடக்க,
மகனே என்று அன்னை அழைக்க,
அதிர்ந்து இவனும் பின்னல் பார்க்க,

அடடா..!
யார் செய்த பாவமோ,
இவன் கனவில் கூட இன்னும் 
வேலையில்லா   பட்டதாரி..

Comments

Popular posts from this blog

நான் இன்னும், இன்றும், உன்னை காதல் செய்கிறேன்.

பின் ஜென்மம்

சிற்பி